ஒரு நாள் கடற்கரையில் ஒருவனுக்கு ஒரு பாட்டில்(புட்டி) கிடைத்தது. அவன் அதை திறந்த போது அதிலிருந்து ஒரு பூதம் வெளிப்பட்டது.
அது அவனிடம் ”நீங்கள் என்னை விடுவித்தீர்கள். அதனால் உங்களுடைய ஒரு ஆசையை நான் நிறைவேற்றி வைக்கிறேன். சீக்கிரம் கேளுங்கள்” என்றது.
அவன் பாக்கெட்டிலிருந்து ஒரு உலக வரைபடத்தை எடுத்து அதில் மத்திய கிழக்கு பகுதியை காண்பித்து ”இங்கு எப்போதும் அமைதி நிலவ வேண்டும்” என்றான்.
பூதம்”அச்சச்சோ. அது ரொம்ப கஷ்டம். நீங்க வேறு ஏதாவது கேளுங்கள்” என்றது.
அவன் சொன்னான் “என் மனைவி என்னோடு சண்டை போடாமல் இருக்க வேண்டும்”
பூதம் சில நொடி யோசித்து விட்டு சொன்னது”மறுபடியும் ஒருதடவை அந்த வரைபடத்தை காண்பிக்கிறீங்களா?”
Post a Comment