இரண்டு பேர் கொளுத்தும் வெய்யிலில் ஒரு பள்ளம் தோண்டிக் கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களில் ஒருவன் கேட்டான்.
”நாம் இங்கே வெய்யிலில் பள்ளம் தோண்டிக்கிட்டிருக்கோம். நம்ம முதலாளி அங்கே
மரத்துக்கு கீழே நிழல்ல நின்னுட்டுக்கிறாரே ஏன்?”
மற்றவன் சொன்னான் ”தெரியலையே” “சரி நான் போய் கேட்டுட்டு வரேன்”
அவன் முதாலாளியிடம் சென்றான்.
”நாம் இங்கே வெய்யிலில் பள்ளம் தோண்டிக்கிட்டிருக்கோம். நீங்கே இங்கே கீழே
நிழல்ல நின்னுட்டு இருக்கிறீங்களே ஏன்?”
முதாலளி சொன்னார் ”அதுதான் ”புத்திசாலித்தனம்”
“அப்படின்னா?”
அவர் மரத்தின் மீது கையை வைத்து ”என் கைமேல் குத்து” என்றார்.
அவன் குத்தும்போது அவர் கையை எடுத்து விட்டார். அவன் மரத்தில் கையை
குத்திக்கொண்டான்.
முதலாளி சொன்னார் “இதற்கு பேர்தான் புத்திசாலித்தனம்”
பிறகு அவன் தன் நண்பனிடம் திரும்பி வந்தான்.
”முதலாளி கிட்ட கேட்டியா என்ன காரணம்?”
”அதுக்கு காரணம் புத்திசாலித்தானமாம்”
”அப்படின்னா?”
அவன் தன் கையை எடுத்து தன் முகத்தின் மீது வைத்துக் கொண்டு ”என் கைமேல் குத்து”
என்றான்
Post a Comment